ஓயாத அலைகள் – 01, 02, 03 நடவடிக்கைளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார்.
கேணல் ஆதவன் வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
குடாரப்பு தரையிறக்கத்தின் பின் இத்தாவிலில் எதிரியின் கோட்டைக்குள் படையணியை நிறுத்தி எந்த ஒரு பின்தள உதவியும் இல்லாமல் 34 நாட்கள் எதிரியைத் திணறடிக்க வைத்தவர் பிரிகேடியர் பால்ராஜ்.
தமிழ்நாட்டில் 09 ஆவது பயிற்சிப் பாசறையில பயிற்சி எடுத்தபோது, அங்கும் பயிற்சிப்பாசறையின் அணித்தலைவராக இவர் செயற்பட்டார்.
1987 ஆம் ஆண்டு இந்தியப் படையினருக்கு எதிரான தாக்குதல் காலப்பகுதியில் மணலாற்றில் மேஜர் பசீலனால்தான் பிரிகேடியர் பால்ராஜ் தமிழீழ தேசியத்லைவர் அவர்களுக்கு அறிமுகமாகின்றார்.
மேஜர் பசீலன் வீரச்சாவடைந்த பின்னர் வன்னி மாவட்டத் தளபதியாக பெறுப்பெடுத்து வன்னியில் ஏராளமான தாக்குதல்களை இந்தியப் படையினருக்கு எதிராக நடத்தியவர் அவர்.
2 ஆம் ஈழப்போரில் மாங்குளம் படைமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் வெற்றியின் பின்னணியில் பிரிகேடியர் பால்ராஜ் செயற்பட்டார்.
ஜெயசிக்குறு எதிர்ச் சமரில் நெடுங்கேணிப் பகுதியில் நின்று எதிரிக்கு பாடம் புகட்டியவர்.
ஓயாத அலைகள் – 01, 02, 03 நடவடிக்கைளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது.
வடபோர் முனையில் ஓயாத அலைகள – 03 அடிக்கும் போது குடாரப்பு ஊடாக தரையிறங்கி எதிரிக்கு பலத்த அதிர்ச்சியையும் இழப்பினையும் கொடுத்தவர் பிரிகேடியர் பால்ராஜ். எந்த ஒரு பின்தள உதவியும் இல்லாமல் 34 நாட்கள் எதிரியைத் திணறடிக்க வைத்தார்.
ஆனையிறவு வெற்றிக்கு காரணமாக பிரிகேடியர் பால்ராஜின் குடாபரப்பு ஊடறுப்பு தாக்குதல் இருந்தது. அந்த வெற்றி மிகப்பெரிய சாதனையாகும் என்றார் அவர்.